இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 ஏப்ரல், 2014

திருக்குர்ஆன் மலர்கள்: ஆட்சியாளர்களை எழைகளாக்கிய இறையச்சம்!

திருக்குர்ஆன் மலர்கள்: ஆட்சியாளர்களை எழைகளாக்கிய இறையச்சம்!: 3:26. (நபியே!) நீர் கூறுவீராக: '' அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்...

திங்கள், 28 ஏப்ரல், 2014

நோய் வரும்போது இறை உதவி தேடுவது எவ்வாறு?

நமக்கோ குழந்தைகளுக்கோ நமக்கு வேண்டியவர்களுக்கோ திடீரென நோய் வந்து விட்டால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது.. நிம்மதியை இழந்து விடுகிறோம். சில அடிப்படையான விஷயங்களைப் புரிந்து கொண்டு அவற்றை மனதில் இருத்தி அதன்படி செயல்பட்டால் நோயும் குணமாகும், அந்த நோய் கொண்டுவரும் உடல்ரீதியான, மனரீதியான, மற்றும் பொருள்ரீதியான இழப்புகளில் இருந்தும்  நாம் நம்மை சுதாரித்துக் கொள்ளலாம்.
நோய் ஏன் வருகிறது?
முதலில் நோய் ஏன் வருகிறது? பல பதில்களை நாம் அறிந்திருந்தாலும் அது நம்மைப் படைத்தவன் புறத்திலிருந்து எச்சரிக்கை என்பதை அதிமுக்கியமாக நாம் உணர வேண்டும்! கண்களை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் குதிரையை அதன் மேலுள்ள குதிரைஒட்டி மெதுவாக கடிவாளம் கொண்டு இழுக்கும் போது அக்குதிரை நிதானத்தை அடைகிறது. அதுபோன்ற ஒரு செயலே நோய் என்பதும்!
மனிதன் அன்றாட வாழ்க்கையில் ஈடுபடும்போது இறைவனைப் பற்றியோ, இறைவன் புறத்திலிருந்து அனுபவித்துக் கொண்டு வரும் எண்ணற்ற அருட்கொடைகளைப் பற்றியோ சிறிதும் பொருட்படுத்துவதில்லை. தன்னிலை மறந்து கண்ணை மூடியவனாக ஓடிக்கொண்டிருக்கும் அவன் அவனது உடல், பொருள் ஆவி என அனைத்துக்கும் சொந்தக்காரன் தன்னைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன்தான் என்பதை மறந்து விடுகிறான். அவனது கருணை இல்லாமல் தன்னால் இங்கு வாழ முடியாது என்பதையும் அவன் கொடுத்துவரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறான் என்பதையும் எளிதாக மறந்து விடுகிறான். அப்படிப்பட்ட மனிதனை நிதானப் படுத்த இறைவன் விடுக்கும் எச்சரிக்கையே நோய் என்பது! நோய் வரும் முன் வரை தனது உடல் இயக்கங்களை சமநிலையில் இயக்கிவந்த இறைவனின் கருணையை நினைவூட்ட வருகிறது நோய்! அவ்வாறு இறைவனை நினைவூட்டி மனிதனை பாவங்களில் இருந்து மீட்டு நல்லவனாக மாற்ற வருகிறது நோய்!
எனவே நோய் வரும்போது நாம் மிக மிக முக்கியமாக உணர வேண்டியவை :
படைத்தவனை உணர்வோம்
·  நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் கருணை மிக்க இறைவன் ஒருவன் இருக்கிறான்.
·  நாம் இதுவரை தங்கு தடையின்றி அனுபவித்து அருட்கொடைகளுக்கு நம் இறைவனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
·  அந்த ஒருவன் மட்டுமே நம் அனைவருக்கும் இறைவன். அவனை மட்டுமே நாம் வணங்க வேண்டும். அவன் மட்டுமே நம் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்க முடியும். அவன் எப்படிப்பட்டவன்?
திருக்குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றிக் கூறுகிறான் :
நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.  (திருக்குர்ஆன் 112: 1-4)
 (அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ கருதி விடாதீர்கள். இவ்வுலகைப் படத்துப் பரிபாலித்து வரும் ஏக இறைவனுக்கு அரபு மொழியில் அல்லாஹ் என்று கூறப்படும். திருக்குரான் இறைவனைக் குறிக்க அந்த வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறது.)
அப்படிப்பட்ட இறைவனை நேரடியாக விளித்துப் பிரார்த்திக்க வேண்டும். நமக்கு வாய்த்துள்ள கஷ்டங்களையும் குறைகளையும் நீக்குமாறு முறையிட வேண்டும். நோயிலிருந்து விரைவில் நிவாரணம் நல்குமாறு கோர வேண்டும். நமது குறைகளை நமது இறைவனிடம் முறையிட எந்த இடைத்தரகர்களையும் நாடக்கூடாது. அவனுக்கு இணையாக வேறு யாரையும் தெய்வங்கள் என்று கருதி வணங்கக்கூடாது. உயிரும் உணர்வும் அற்ற உருவங்களை நோக்கி கடவுளே என்று அழைத்து அவனை இழிவு படுத்தக் கூடாது.
30:40 'அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதாஅல்லாஹ் மிகவும் தூயவன்அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.'
திருக்குர்ஆனில் இறைவன் நமக்கு இவ்வாறு பிரார்த்திக்குமாறு கற்றுத்தருகிறான்.இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் (குர் ஆன் 1 : 4)
·  படைத்தவனை விட்டு விட்டு அவனது படைப்பிங்களை வணங்குவதோ அவைகளிடம் பிரார்த்திப்பதோ நமக்கு எந்த பயனையும் தராது. அது பாவமாகும். அதனால் நோயும் குணமாகாது மாறாக இறைவனது கோபத்தை அது தூண்டும். திருமறை மூலம் இறைவன் கற்றுத்தருவதைப் பாருங்கள்
;'அவனே என்னைப் படைத்தான்பின்னும்அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.அவனே எனக்கு உணவளிக்கின்றான்அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான். நான் நோயுற்ற கால்த்தில்அவனே என்னைக் குணப்படுத்துகிறான். மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.' (குர்ஆன் 26:78-81)
மேற்கண்டவற்றை உணர்ந்து நம்மைப் படைத்தவன்பால் திரும்பி  பாவ மன்னிப்பு கோர வேண்டும்.
அடுத்ததாக நாம் உணரவேண்டியது:
இவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை
·  இவ்வுலக வாழ்க்கை என்பது தற்காலிகமானது. அழியக்கூடியது. இதை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாக ஏற்படுத்தியுள்ளான்.
67:2 உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன்மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்¢மேலும்அவன் (யாவரையும்) மிகைத்தவன்,  மிக மன்னிப்பவன்.
·  ஒருநாள் இவ்வுலகம் முற்றாக அழிக்கப் படும். மீண்டும் இறைவனிடமிருந்து கட்டளை வரும்போது இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த அனைவரும்- அதாவது இப்பூமியின் மீது தோன்றிய முதல் மனிதனில் இருந்து கடைசி மனிதன்வரை அனைவரும்- மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபடுவார்கள். அந்த நாள் தான் இறுதித்தீர்ப்பு நாள் எனப்படும்
·  எனவே இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளும் வசதிகளும் கொடுக்கப் படுகின்றன. சிலருக்கு செல்வமும் சிலருக்கு வறுமையும் சிலருக்கு ஆரோக்கியமான உடல்கட்டும் சிலருக்கு உடல் ஊனமும் என மாறி மாறி கொடுக்கப்பட்டு இங்கு மனிதர்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல, இங்கு அமைதி, அட்டூழியம் அக்கிரமம், நியாயம், அநியாயம் என பல சூழ்நிலைகளையும் கடந்து செல்ல வேண்டி வரும், இது ஒரு தற்காலிகமான சோதனைக்கூடம் என்பதால்!
மறுமை வாழ்க்கையே உண்மையானது   
21:35 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது¢பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
இங்கு இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு மறுமையில் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குகிறான். கட்டுப்படாமல் தான்தோன்றித் தனமாக வாழபவர்களுக்கு தண்டனையாக நரகத்தை வழங்குகிறான்.
·  நமது உண்மையான மற்றும் நிலையான முடிவில்லாத வாழ்க்கை என்பது மரணத்துக்குப் பிறகு உள்ள வாழ்க்கைதான். அது ஒன்று சொர்க்கத்தில் அமையும் அல்லது நரகத்தில் அமையும். இவை இரண்டும் அல்லாத வேறு ஒரு வாழ்க்கை கிடையாது.
·  இன்று நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை என்ற வாய்ப்பு ஒரே ஒரு முறை கிடைப்பது. மீண்டும் மீண்டும் பிறப்பது என்பது கிடையாது. அதுவும் அவரவரது மரணம் வரை மட்டுமே இவ்வாய்ப்பு நீடிக்கும்.
3:185 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்¢ அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான் உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்¢ எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்¢ இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
·  எனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் சஞ்சலங்களுக்கு இடம் கொடாமல் உன்னிப்பாக, கவனமாக  ஒழுங்குற செயல்பட்டால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம். ஆனால் இப்பரீட்சையை உதாசீனமாக எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செலவிட்டால் நாம் சென்று வீழ்வது நரகப்படுகுழியில்தான் அதுவோ முடிவில்லாத நிரந்தரமான இருப்பிடமாகும்.
மறுமை சாத்தியமா?
·  சொர்க்கம் நரகம் என்பது கற்பனையோ மாயையோ அல்ல என்பதை  சற்று சிந்தித்தால் உணரலாம். சாதாரண ஒரு இந்திரியத் துளியில் இருந்து உருவாகி இன்று பூமியில் நடமாடிக்கொண்டிருக்கிறோம். இது எப்படி வாஸ்தவமோ அதைவிட வாஸ்தவம் அது, இதை நடத்திக்கொண்டிருக்கும் இறைவனுக்கு நம்மை மீண்டும் படைப்பது என்பது கடினமானது அல்ல.
36: 77-79 ''மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையாஅவ்வாறிருந்தும்அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.மேலும்அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டுஅவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?'' என்று. (நபியே!) நீர் கூறுவீராக! ''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்'' என்று'
·  இறுதித்தீர்ப்பு நாளின்போது ஒவ்வொரு மனிதனும் இப்பூமியின் மீது செய்த புண்ணியங்களும் பாவங்களும்  எடுத்துக்காட்டப் படும். புண்ணியங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு சொர்க்கம் விதிக்கப்படும் பாவங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு நரகம் விதிக்கப்படும்.
சொர்க்கம் என்பது எப்படி இருக்கும்?
·  அது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.. தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா?
இதோ தனது திருமறையில் இறைவன் கூறுகிறான்:

43:71 பொன் தட்டுகளும்கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும் இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும்,கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன.  இன்னும், 'நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!' (என அவர்களிடம் சொல்லப்படும்.)
47:15 பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும்தன் சுவை மாறாத பாலாறுகளும்அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும்தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும்அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும்தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து,கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
29:58 எவர்கள் இறைநம்பிக்கைகொண்டுநற்காரியங்கள் செய்கிறார்களோ அவர்களைசதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில்நிச்சயமாக நாம் அமர்த்துவோம். அவற்றில் அவர்கள்நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள். (இவ்வாறாக நற்)செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
நரகமும் காத்திருக்கிறது
·  சொர்க்கத்தைப் போலவே நரகமும் மறுபுறம் காத்திருக்கிறது. அது இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் காத்திருக்கிறது. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர் ஆன் எச்சரிக்கிறது:

7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
4:56 யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்¢ அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களைஅவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.

78:21  நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.  வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக!  அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!
18:29  (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: 'இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது¢' ஆகவேவிரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்¢ (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்¢ அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்¢ மிகக் கேடான பானமாகும் அது! இன்னும் இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.
ஆக, நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக இறைவனிடம் மன்னிப்பு கோரி திருந்திய வாழ்க்கை வாழவேண்டும். இறைவன் நம் அனைவரையும் நரகிலிருந்து காப்பானாக! சொர்க்கம் செல்லும் நன்மக்களில் நம்மை சேர்த்து வைப்பானாக!
வாழ்க்கைப் பரீட்சையில் சோதனைகள் சகஜம்
அடுத்ததாக நாம் உணரவேண்டியது., இவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை என்பதால் இதில் நோய் உட்பட பல சோதனைகளும் சகஜமாக வந்து செல்லும் என்பதே! இதை இறைவனே எடுத்துக் கூறுகிறான்:
2:155  'நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும்,பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
அவ்வாறு சோதனைகள் வரும்போது நாம் பதறாமல் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் உண்மை நிலையை மனதில் இருத்தி நம்மை நாமே நிதானப் படுத்திக் கொள்ள வேண்டும். இதோ இறைவனே வழிகாட்டுகிறான்:
2:156-157    '(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.'
அதாவது நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்  என்ற பேருண்மையை நினைவு கூர்ந்து பொறுமை காத்து ஆக வேண்டியவற்றை கவனித்தால் நமக்கு மன நிம்மதியும் ஏற்படும், இழப்பையும் இலாபகரமானதாக மாற்ற முடியும்! .....எப்படி? 
இறுதி இறைத்தூதர் முஹம்மது நபியவர்கள் கூறினார்கள்: சோதனைக்கு உள்ளான ஒருவர் இறைவன் இட்ட  கட்டளைப்படி இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்) என்று கூறியபின் இறைவா, நான் படும் துன்பத்திற்கு கூலி வழங்குவாயாக, நான் இழந்ததை விட மேலானதைக் கொண்டு இதற்க்கு பகரம் வழங்குவாயாக! என்று பிரார்த்தித்தால் அவருக்கு இறைவன் மேலானதை வழங்குவான் (நூல்: முஸ்லிம்)  
நோய் வரும்போது பொறுமையைக் கடைப்பிடித்து இறைவனை நினைவுகூர்ந்து துதித்தால் நமது ஆரோக்கியத்தை முன்பிருந்ததைவிட இறைவனே செம்மைப் படுத்துகிறான்! இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு அடியான் நோய்வாய்ப்பட்டு அவனை விசாரிக்க வருவோரிடம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பானாயின், இறைவன் என் அடியான் மீது எனக்கு கடமை இருக்கிறது. அவனை நான் இறக்க வைப்பின் அவனை சொர்க்கத்தில் நுழைய வைப்பேன். அவனை நான் குணப்படுத்தினால் அவனுடைய சதையை விட சிறந்த சதையையும் அவனுடைய இரத்தத்தை விட சிறந்த இரத்தத்தையும் மாற்றி அவனுடைய தீமைகளை அவனை விட்டும் அப்புறப்படுத்தி விடுவேன் என்று கூறுவான். (நூல் : முஅத்தா)
மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்:
  • மேற்கண்ட வாழ்வின் அடிப்படை உண்மைகளை நினைத்து மனதை உறுதிப்படுத்தி மேற்கொண்டு நோய்க்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். நோயை வாழ்வின் சோதனையாக ஏற்படுத்திய இறைவனே அதற்கு மருத்துவம் மேற்கொள்ளவும் பணிக்கிறான்.
மருத்துவம் செய்யுங்கள்! ஏனெனில் மரணம் என்ற நோயைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)
ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)
------------------------------------------------- 
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html

படைத்தவனை அறிவதற்கே பகுத்தறிவு 
http://quranmalar.blogspot.com/2016/09/blog-post_12.html


செவ்வாய், 22 ஏப்ரல், 2014

ஒரு வரலாற்று நாயகன் இஸ்லாத்தை ஏற்றபோது......

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவில் சத்தியப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த வேளை அது. மக்கள் சிறுகச்சிறுக இஸ்லாத்தில் தங்களை இணைத்துக்கொண்டு இருந்தனர்.
உமர் பின் கத்தாப் (கத்தாப் என்பாரின் மகனான உமர்) நல்ல வலிமையும் கம்பீரமான தோற்றமும் முரட்டு சுபாவமும் உடையவராக இருந்தார்.. அவரால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பலரும்  பல வகையான தொந்தரவுகளை, எண்ணற்ற இன்னல்களை நீண்ட காலமாக அனுபவித்து வந்தனர். அறியாமைக் கால எண்ணங்களும் மூடப் பழக்க வழக்கங்களின் பிடிவாதமும், மூதாதையர்களின் மார்க்கத்தின் மீதிருந்த அலாதியான பற்றும்  உமரை இஸ்லாத்துக்கு எதிராக செயல்பட  வைத்தது.
ஒருநாள் நபி (ஸல்) அவர்களின் மீது அவருக்கிருந்த, அளவுமீறிய கோபத்தினால் வாளை ஏந்தி நபி (ஸல்) அவர்களின் கதையை முடித்துவிட வெளியேறினார். அப்போது நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் (ரலி) என்பார் வழியில் குறுக்கிட்டார்.
உமரே நீ எங்கு செல்கிறாய்?’ என்று கேட்டார்.
நான் முஹம்மதை கொல்லச் செல்கிறேன்.என்றார்.
 அப்படியா....  முஹம்மதை கொலை செய்துவிட்டு ஹாஷிம், ஜுஹ்ரஹ் இவ்விரு கிளையார்களிலிருந்து பயமின்றி தப்பித்து வாழ முடியுமா உன்னால் ?’ என்று அச்சுறுத்தினார் நுஅய்ம்.
அதற்கு, ஓஹோ.....  நீயும் உனது மார்க்கத்தை விட்டுவிட்டு முஹம்மதின் மார்க்கத்திற்கு சென்று விட்டாயா? என்று உமர் கூறினார்.
 உமரே! ஆச்சரியமான ஒன்றை நான் உமக்கு சொல்லட்டுமா?. .... உனது சகோதரியும் அவளது கணவரும் உனது மார்க்கத்தை விட்டுவிட்டு முஹம்மதின் மார்க்கத்துக்குச் சென்று விட்டனர் ... தெரியுமா உனக்கு?’ என்றார் நுஅய்ம்.
இதைக் கேட்டதுதான் தாமதம். உமரின் இலக்கு மாறியது. முதலில் இவர்களை கவனிப்போம்.... அவர்களை நோக்கி சட்டென விரைந்தார் உமர்.
அங்கே சகோதரியின் வீட்டில்.....
 நபித்தோழர்களில் ஒருவரான கப்பாப் (ரழி) அவர்கள் உமரின் சகோதரிக்கும் அவரது கணவருக்கும் தனது குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட ஏடுகளில் இருந்து தாஹா| எனத் தொடங்கும் திருக்குர்ஆன் அத்தியாயத்தின் வசனங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உமர் வருவதை அறிந்த கப்பாப் (ரழி) வீட்டினுள் மறைந்து கொண்டார். உமரின் சகோதரியும் அந்த ஏட்டை மறைத்து விட்டார்கள். எனினும், உமர் வீட்டிற்கு அருகே வந்தபோது கப்பாப் (ரழி) கற்றுக் கொடுத்த சப்தத்தை கேட்டு விட்டார் உமர்.
வீட்டிற்குள் நுழைந்ததும்....
உங்களிடம் நான் செவிமடுத்த இந்த மெல்லிய சப்தம் என்ன?’ என்று கேட்டார் உமர்.
நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை தவிர வேறு எதுவும் இல்லையேஎன்று அவ்விருவரும் கூறினார்கள்.
 சரி.... நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா?’ என்று கேட்டார் உமர்.
 உமரே! உன்னுடைய மார்க்கத்தை தவிர வேறொன்றில் சத்தியம் இருந்தால் உன் கருத்து என்ன?’ என்று துணிந்து கேட்டார் மைத்துனர்
கடுமையான கோபம் பொத்துக்கொண்டு வந்தது உமருக்கு. மைத்துனர் மீது பாய்ந்து அவரை பலமாகத் தாக்கி மிதிக்கவும் செய்தார். அவரது சகோதரி தனது கணவரை விட்டும் உமரை விலக்கினார். உமர் கடுமையாக தன் சகோதரியின் கன்னத்தில் அறைந்து அவரது முகத்தையும் ரத்தக் காயப்படுத்தினார்.
இப்போது அடங்கிப்போகவில்லை உமரின் சகோதரி....  கோபத்தில் வீரிட்டேழுந்தார்.
னது மார்க்கமல்லாத வேறொன்றில் உண்மை இருந்தாலுமா நீ ஏற்றுக்கொள்ள மறுப்பாய் உமர்?  இதோ நன்றாகக் கேட்டுக்கொள்... அஷ்ஹது அன் லா இலாஹா இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ்... (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்)  என்று இஸ்லாத்தை ஏற்கும்போது கூறும் சத்தியப் பிரமாணத்தை உரக்கக் கூறினார்.
ஆடிப் போய்விட்டார் உமர்! தனது கோபம் பலனற்றுப் போனதைக் கண்டு உமர் நிராசை அடைந்தார். தனது சகோதரிக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தைப் பார்த்து அவருக்கு கைசேதமும், வெட்கமும் ஏற்பட்டது.
உங்களிடமுள்ள அந்த ஏடுகளை எனக்குக் கொடுங்கள். நான் அதை படிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அதற்கு அவரது சகோதரி நீ அசுத்தமானவன். எழுந்து போய் குளித்து விட்டு வா’ கறாராகக் கூறினார் சகோதரி.
குளித்துவிட்டு வந்தார் உமர்.
திருமறையை கையிலேந்தி பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்’ (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்)என்று ஓதத் துடங்கினார் உமர்....... வியப்பில் ஆழ்ந்து போனார் அந்த மாவீரர்!
 ஆஹா! என்ன தூய்மையான சொற்கள்என்று கூறினார்.  தொடர்ந்து தாஹா| என்று தொடங்கி பதினான்காவது வசனம் வரை தொடர்ந்து ஓதி முடித்தார்.
எவ்வளவு அழகான சொற்கள்! எவ்வளவு இனிமையான வசனங்கள்! எனக்கு முஹம்மதைக் காட்டுங்கள்!ஒரு கணமும் பொறுக்கமுடியவில்லை அவரால்....
உமரின் பேசுவதைக் கேட்டார் அதுவரை ஒளிந்திருந்த கப்பாப் (ரழி)....
நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள் உமரே!. வியாழன் இரவு, ‘அல்லாஹ்வே! உமர் அல்லது அபூஜஹ்ல் மூலமாக இஸ்லாமுக்கு உயர்வைக் கொடு!என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்வதை நான் கேட்டேன்.. நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை உங்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று நான் உண்மையில் நம்புகிறேன்என்றார் வெளியே வந்த கப்பாப்(ராலி)
தாமதமின்றி நபிகளைக் காணப் புறப்பட்டார் உமர். தனது வாளை அணிந்து கொண்டு நபி (ஸல்) அவர்களின் வீட்டை நோக்கி வந்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலையில் உள்ள ஒரு இல்லத்தில் தன் தோழர்களோடு இருந்தார்கள். உமர் வந்த வேளையில் நபி (ஸல்) அவர்கள் வீட்டின் உள்பகுதியில் வஹி (இறைச்செய்தி) வந்த நிலையில் இருந்தார்கள். உமர் கதவைத் தட்டியபோது தோழர்களில் ஒருவர் கதவின் இடுக்கின் வழியாக அவரை வாள் அணிந்த நிலையில் கண்டார். உடனே அங்கிருந்தோருக்கு அச்செய்தியைக் கூறினார்.
அங்கிருந்தவர்களில் நபிகளாரின் சிறிய தந்தை ஹம்ஜாவும் ஒருவர். அவர் ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்றிருந்தார்.. அவர் குறுக்கிட்டார்....
ஓ! உமரா! வரட்டும், அவருக்கு கதவை திறந்து விடுங்கள்! அவர் நன்மையை நாடி வந்திருந்தால் அந்த நன்மையை நாம் அவருக்குக் கொடுப்போம்! அவர் தீமையை நாடி வந்திருந்தால் அவரது வாளாலேயே அவரை நாம் கொலை செய்து விடுவோம்!என்று ஹம்ஜா (ரலி) கூறினார்கள். உமர் வந்தார், நபிகளாருக்காக காத்திருந்தார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு உமரை சந்தித்தார் நபி (ஸல்) அவர்கள்.... உமரின் சட்டையையும் வாளையும் பிடித்து அவரைக் குலுக்கி
உமரே! நீ வழிகேட்டிலிருந்து விலக மாட்டாயா? வலீதுக்கு ஏற்பட்டதைப் போன்ற கேவலத்தையும், தண்டனையும் அல்லாஹ் உனக்கு இறக்க வேண்டுமா? அல்லாஹ்வே! இதோ உமர் இப்னு கத்தாப் வந்திருக்கிறார். அல்லாஹ்வே! உமரால் இஸ்லாமிற்கு உயர்வைக்கொடு!என்று கூறினார்கள்.
உமர் (ரழி) அஷ்ஹது அல்லாஇலாஹஇல்லல்லாஹ் வ அன்னக்க ரஸுலுல்லாஹ்என்று கூறி இஸ்லாமைத் தழுவினார். (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அல்லாஹ்வின் தூதர் நீங்கள் என்றும் சாட்சி கூறுகிறேன் என்பதே இதன் பொருளாகும்.)
இதனைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெயரிவன்) என்று முழங்கினார்கள். அந்த சப்தத்தைப் பள்ளியில் உள்ளவர்களுக்கும் கேட்டது.

ஆம், உலக வரலாற்றில் அழியாத சுவடுகளுக்கு சொந்தக்காரரின் முதல் காலடித் தடம் அது!