இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 15 ஜனவரி, 2013

மாட்டுப்பொங்கல் சிந்தனைகள்....



இவ்வுலகையும் அவற்றில் உள்ள அனைத்தையும் படைத்தவனும் பரிபாலித்து வருபவனும் ஆகிய இறைவன் ஒரே ஒருவனே! நாம் அனுபவித்து வரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி கூறி அவனுக்கு கீழ்படிந்து வாழ நாம் கடமைப்பட்டுள்ளோம். நம் வணக்கத்திற்குத் தகுதியானவனும் நம் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கக் கூடியவனும்   அவன் ஒருவன் மட்டுமே! அவனால்லாத அனைத்துமே அவனது படைப்பினங்களே! அவன் தயவில் வாழ்பவையும் வாழ்ந்து மரித்தவையுமே! இவற்றை எல்லாம் கடவுள் என்பதற்கோ இவற்றை வணங்குவதற்கோ எந்த முகாந்திரமும் கிடையாது! படைத்த இறைவனை நேரடியாக- இடைத் தரகர்கள் இன்றி - வணங்குவதற்கு பதிலாக படைப்பினங்களை வணங்கும் செயல் பல பாவங்களுக்கு வித்திடுகிறது. இறைவனைப் பற்றி மனித உள்ளத்தில் பலவீனமான கருத்தை இது உண்டாக்குவதால் இறையச்சம் அகன்று போகிறது. அதனால் பாவங்கள் மலிகின்றன. இடைத் தரகர்கள்  கடவுளின் பெயரால் மக்களை சுரண்டவும், மூட நம்பிக்கைகளை நாட்டில் பரப்பவும் ஏதுவாகிறது. மனித கற்பனைகளுக்கேற்ப கடவுளை சித்தரிப்பதால் அவற்றை வணங்குவோர் தனித்தனி குழுக்களாகி ஒரே மனித இனம் இணைக்க முடியாதவாறு துண்டு போடப்படுகிறது. ஆனால் இவ்வுலகைப் படைத்த இறைவன் இச்செயலை மன்னிக்க முடியாத பாவம் என்றும் இதற்கு தண்டனை நரகமே என்றும் தனது இறுதிவேதமாம் திருக்குர்ஆனில் எச்சரிக்கிறான்.  வருடமெல்லாம் நமக்காக உழைத்த மாடுகளையும் பசுக்களையும் மக்கள் மகிழ்விக்கும் இந்நாளில் அவற்றை நமக்கு வசப்படுத்தித் தந்த இறைவனை மறக்கலாகாது.
மனிதர்களை அவர்கள் சிந்தித்து உணருமாறு இறைவன் கூறும் வசனங்கள் இந்நாளுக்குப் பொருத்தமானவை:
36:71. நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.

36:72. மேலும், அவற்றை அவர்களுக்குக் கீழ்படியுமாறு செய்துள்ளோம்; ஆகவே, அவற்றில் சிலவற்றின் மீது அவர்கள் ஏறிச்சவாரி செய்வதும் இருக்கிறது; இன்னும் அவற்றிலிருந்து சிலவற்றைப் புசிக்கிறார்கள்.

36:73. மேலும், அவற்றிலிருந்து அவர்களுக்கு பயன்களும், பானங்களும் இருக்கின்றன, இவற்றுக்கெல்லாம் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?

36:74.எனினும் அல்லாஹ் அல்லாதவற்றையும் - தாங்கள் உதவி செய்யப்படும் பொருட்டு அவர்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
36:75. ஆனால் அவை அவர்களுக்கு உதவி செய்யும் சக்தி பெறவில்லை -ஆயினும் அவற்றையே இவர்களுக்கு (எதிரான) படையாக (மறுமை நாளில்) கொண்டுவரப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக